குழந்தைகள் உலகம் அற்புதமானது.கற்பனைகளும்,கனவுகளும் கொண்டு துள்ளி திரியும் அந்த பருவத்தின் மீதான ஏக்கம் யாவருக்கும் உண்டு.கிராமத்து சிறார்களின் உலகம் இதனிலும் சுவாரசியமானது.வயல் வெளிகளில் ஓடி திரிந்து,விருப்ப மரங்களின் ஏறி ஆடி,பூக்களையும்,பழங்களையும் தனதாக்கி கொண்டு,வித விதமாய் விளையாட்டுகள் பழகி, நினைத்த பொழுதில் கிணற்றில் குளித்து மகிழும் வாழ்கை இச்சிறுவர்களுக்கும் உண்டு...