You are here

மணற்கேணி

கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.