கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன்.
பிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.(2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு இது)