You are here

விஜயா பதிப்பகம்

வேடிக்கை மனிதர்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகத்தில் நூறு கட்டுரைகள். நூலாசிரியர் எதிர்கொண்ட அனுபவங்கள் கண்ணில் தென்பட்ட சில காட்சிகள். கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள். மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள்; கனவுகள்.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
5005 Paranth Available - Reserve it

விழியீர்ப்பு விசை

கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது. கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
3006 partheeban Available - Reserve it