அந்நியர்க்கு அடிமைப்பட்டிருக்கும் மக்கள், அரசியல் - பொரு ளாதாரம் மற்றும் பண்பாட்டுப் போராட்டங்களை மேற்கொள்வது இயல்பு. இத்தேடலின் அடிப்படையிலேயே ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவல் உருப்பெற்றுள்ளது.
பெரும்பாலும் தமிழில் வரலாற்று நாவல்கள் நந்திவர்மன் முதல் திருமலை நாயக்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமிட்டே எழுதப்பட்டுள்ளன. இதற்கு மாறான ஒரு போக்கை உருவாக்கிய மாதவையா, பிரபஞ்சன் ஆகியோரது போக்குகளின் ஊடே பயணித்து 1048 பக்கங்களைக் கொண்ட ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவலை சு. வெங்கடேசன் உருவாக்கியுள்ளார்.