ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகத்தில் நூறு கட்டுரைகள். நூலாசிரியர் எதிர்கொண்ட அனுபவங்கள் கண்ணில் தென்பட்ட சில காட்சிகள். கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள். மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள்; கனவுகள்.