You are here

ஜெயமோகன்

ஜெயமோகன்

சங்க சித்திரங்கள்

உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
4005 partheeban Available - Reserve it

ஜெயமோகன் சிறுகதைகள்

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2023 partheeban Available - Reserve it

அறம்

ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஓர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர்ப் பிரசுரத்தைச் சொல்லலாம். ’இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை.
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2019 partheeban Available - Reserve it

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர். எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன்.

ஊமைச்செந்நாய்

புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2014 partheeban Available - Reserve it

திசைகளின் நடுவே

புனைவு
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
2013 partheeban Available - Reserve it

ஏழாம் உலகம்

ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் இது. 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழமிருநூறு பக்க அளவு கொண்டது. தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப்பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக் ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள் மிருகங்கள்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம்
Total No of copies: 1
Sl No Donated by Borrowed by
SR JM001 Sathiya Available - Reserve it