ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் இது. 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழமிருநூறு பக்க அளவு கொண்டது. தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப்பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக் ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள் மிருகங்கள்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம்